விருதுநகர் : விருதுநகர் மாவட்ட இளைஞர் அலுவலர் எல்.ஞானசந்திரன் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 1.4.2021ல் 18 வயது பூர்த்தியடைந்த 29 வயதுக்கு உட்பட்ட இருபாலர் விண்ணப்பிக்கலாம். இரண்டாண்டு வரை மாதம் தோறும் ரூ.5000 மதிப்பூதியம் வழங்கப்படும். சமூக பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இளங்கலை, முதுகலை பட்டம், கம்ப்யூட்டர் அறிவு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரணர், இளைஞர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.nyks.nic.in
என்ற இணைய வழியில் பிப்.,20க்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.தொடர்புக்கு 04562 252 770, 94894 62140