கொரோனா தொற்றில்லா சிவகாசியை உருவாக்குவோம்.... மக்களைக் காப்போம்...
உங்களுக்கு காய்ச்சலும்,தலைவலியும் உடம்பு அசதி, இவை அனைத்தும் கொரோனாவின் அறிகுறிகள்.... இந்த அறிகுறிகள் தென்பட்டால் முதல் இரண்டு மூன்று நாட்களுக்குள் அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ முறையை பின்பற்றினால் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்...
மக்கள் செய்யும் தவறு ஆறு நாட்கள் ஏழு நாட்கள் கடந்து தொற்றானது நுரையீரல் வரை சென்றவுடன் மருத்துவமனை தேடிச் செல்கின்றனர்... அப்போதுதான் ஆக்சிஜன் லெவல் குறைந்து மூச்சுத்திணறல் மூலமாக நம்மை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது... தயவு கூர்ந்து தாங்கள் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சாலச்சிறந்தது....
நாம் அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றில்லா சிவகாசியை உருவாக்குவோம்.... மக்களைக் காப்போம்...