54 ஊராட்சிகளில் வீடுகள்தோறும் கொரோனா சோதனை
சிவகாசி- கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சிவகாசி ஒன்றியத்தில் 54 ஊராட்சி களில் உள்ள 100 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஒவ்வொரு ஊராட்சியிலும் தினமும் 300 வீடுகள் வீதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் இதில், காய்ச்சல், சளி, இருமல் இருப்பது கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரதுறை மூலம் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி, பிளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.