சிவகாசி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில்
உள்ள சிவகாசி வட்டம் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும்.[4] சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சிவகாசியில் அக்டோபர் 23, 2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்