சிவகாசி முகநூல் நண்பர்கள் சார்பாக, கட்டணமில்லா மருத்துவ போக்குவரத்து சேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு வசதியாக கட்டணமில்லா மருத்துவ போக்குவரத்து சேவையை சிவகாசி முகநூல் நண்பர்கள் என்ற தன்னார்வலர்கள் செய்துள்ளனர்.
சிவகாசி முகநூல் நண்பர்கள் சார்பாக,
'ஆரோக்கியம்' - Get Well Soon, Sivakasi என்ற பெயரில் கட்டணமில்லா மருத்துவ போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து சேவையை, மருத்துவமனைகளுக்கு செல்ல விரும்பும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், டாயலிசிஸ் செய்பவர்கள், தினமும் மருத்துவ பரிசோதனை செய்யும் அவசியம் உள்ளவர்கள், இருதய பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் என,
பலதரப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக போக்குவரத்து ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வந்தவுடன், ஆம்புலன்ஸ் வாகனம் சுத்தம் செய்யப்பட்டு, அடுத்த நோயாளியை அழைத்துச் செல்கின்றனர். ஆம்புலன்ஸ் போக்குவரத்து வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கோவிட் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்கி வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 30 பயணாளர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணிகளை, சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு ஆம்புலன்ஸ் போக்குவரத்து சேவை மூலமாக வழங்கியுள்ளனர். இந்த மருத்துவமனை ஆம்புலன்ஸ் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கிய சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகளுக்கு சிவகாசி முகநூல் நண்பர்கள் நன்றி தெரிவித்தனர். இலவச போக்குவரத்து சேவை வாகன ஓட்டுநர்களாக பெத்துராஜ், கார்த்தீஸ்வரன், கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். வாகன முன்பதிவு செய்யும் பணிகளையும், நோயாளிகள், வாகன ஓட்டுனர்களை தொடர்பு கொள்ளும் பணிகளை முத்துக்குமார் செய்து வருகிறார். மருத்துவ உதவி போக்குவரத்து வாகன உதவி தேவைப்படுபவர்கள் 6381065298 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த சேவை திட்டத்தை எஸ்எப்எப் அசோக்குமார், கார்த்தீஸ்வரன் ஒருங்கிணத்து செயல்படுத்தி வருகின்றனர். சிவகாசி முகநூல் நண்பர்களின் இந்த சேவையை, சிவகாசி பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.