அனைவருக்கும் வணக்கம்
அனைவருக்கும் வணக்கம்
இன்றைய சேவை (25-03-2020) :
*உணவு கொடுப்போம் உயிர் காப்போம்*
பசித்த போது உணவு கிடைத்துவிட்டால்
அமுதம் என்கிறான் ஆர்பரித்து உண்கிறான்
உணவு உண்டு மிஞ்சினால்
தன்னை சேர்ந்தவர்க்கு கொடுக்கிறான்
எஞ்சினால் பசித்தவர்க்கும் கொடுக்கிறான்
மிருகத்தின் பங்கிட்டு உண்ணும் குணத்தை
பெற்றுவிடுகிறான்
இரந்தவர்க்கு அளிக்கிறான்
இரக்கமுள்ளவனாகிறான்
பசித்த வயிறு நிறைந்ததும்
வாயார வாழ்த்துகிறது.
-- நமது அன்பால் இணைவோம் சார்பாக *சிவகாசி மற்றும் திருத்தங்கல்* போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு *உணவு* வழங்கப்பட்டது.
இந்த சேவையில் நமது சேவை உறவுகள்
*அன்பால் இணைவோம் சதீஷ்குமார், சுரேஷ்குமார்*
*கிருஷ்ண குமார்* ஆகியோரின் உதவியால் பணி சிறப்பாக நிறைவுபெற்றது...
மேலும், *காவல்துறை அதிகாரிகளின்* ஒத்துழைப்பினால் சேவை சிறப்பாக செயல்பட்டது..
நமது சேவை தொடரும்...