சிவகாசி தெற்குத் தெருவில் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உடல்
*JCI சிவகாசி நிலா சார்பில்* இத்தகைய சமுதாயப் பணி நடைபெற்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. தினமும் 50 நபர்களுக்கும் மூன்று வேளை உணவு வீடு தேடி கொடுக்கிறோம். பிகேஎஸ் தெரு, குட்டியனஞ்சான் தெரு, அனந்தப்பன் நாடார் தெரு, முண்ணங்கி நாடார் தெரு, மோ சி தெரு, பட்டி தெரு ஆகிய தெருக்களில் உள்ள மக்களுக்கு இலவசமாக இந்த சேவையை செய்து வருகின்றனர். இந்த சேவையை செய்த *JCI சிவகாசி நிலா அமைப்பின் தலைவர் திரு .ஆத்தீஸ்வரண்* அவர்களுக்கும் *JCI சிவகாசி நிலா குழு அமைப்பின் உறுப்பினர்கள்* அனைவருக்கும் எங்களுடைய நன்றிகள். மேலும் இந்த ஒப்பற்ற பணிக்கு துணைநின்ற *சிவகாசி மாவட்ட துணை ஆட்சியர் திரு. தினேஷ் குமார்* அவர்களுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
*RCE அமைப்பு*
சிவகாசி