ஒரு நாளைக்கு செலவு போக நூத்தம்பது ரூபா கையில் இருக்கும்யா... பணத்தை விட உங்களைப் போன்ற சாதி சனத்தை சேர்த்து வச்சிருக்கேன்..
அது போதும்யா.. னு சொல்றாங்க மாரியாயி அக்கா... ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டில் பழம் வாங்குபவர்களுக்கு தோல் பளபளக்கும் பழங்கள் கிடைக்கலாம்... ஆனால் நிச்சயம் ஒரு பரிவோடு, இத வாங்கிக்கயா என்ற பாசத்தோடு, அன்றாடம் விற்பனைக்கு வரும் பழங்களை ஸ்டிக்கர் ஒட்டாது தந்திட இவர்களைப் போன்ற மாரியாயி அக்காக்களால் தான் முடியும்.. உணவோடு உணர்வுகளையும் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். ஏசி அறையில் விலைபட்டியலோடு விற்கப்படும் பழங்களை அறிந்த உங்கள் பிள்ளைகளுக்கு இவரை போன்றோரிடம் வாங்கும் பொருட்களின் தரத்தையும், உயிர்ப்பையும் அதில் கிடைக்கும் திருப்தியையும் உணர செய்யுங்கள்...