இன்று சிவகாசியில் 100% வாக்குப்பதிவு பேரணி
இன்று சிவகாசியில் ஐந்து ரூபாய் பாடசாலை அமைப்பினர் *RIGHT CLUB FOR EDUCATION* மற்றும் தமிழன் நடன குழு இணைந்து அடுத்த தலைமுறை வாக்காளர்களான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு *100% வாக்குப்பதிவு* குறித்து சிவகாசியில் பிரம்மாண்டமாக பேரணி நடத்தினர். முன்னதாக பேரணியில் கொடியசைத்து துவக்கி வைத்தார் சிவகாசி சார் ஆட்சியர் உயர்திரு. C. தினேஷ் குமார் IAS அவர்கள், விழாவில் RCE ஆலோசகர்கள் திரு.சந்திர ராஜன் மற்றும் திரு.மருதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர்.சுந்தர்ராஜ் பேரணியில் கலந்து சிறப்பு செய்தார். பள்ளி மாணவர்களின் குரல்கள் சாலையின் எங்கும் பரவ, வீதி ஒவ்வொன்றும் இசையால் மகிழ, கரகம் எடுத்து கலைஞர்கள் சிறப்பு செய்ய, வெற்றி பெற்றது 100% வாக்குப்பதிவு பேரணி