ஸ்ரீமாரியம்மன் பங்குனி உத்சவ நிகழ்ச்சிகள்
பெருமதிப்பிற்குரிய நமது உறுப்பினர்களின் கனிவான கவனத்திற்கு:
வணக்கம்.
அரசாங்கத்தின் ஆணைப்படியும், சிவகாசி கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படியும், நமது அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் பங்குனி உத்சவ நிகழ்ச்சிகள் கீழ்க்கண்டபடி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளது 11.04.2021 பங்குனி 29ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00-7.00மணிக்குள் கொடியேற்றம்
12-04-2021 திங்கட்கிழமை முதல் 17-04-2021 சனிக்கிழமை வரை தினசரி மூலவர் அபிஷேகம், தீபாரதனைகள் முடிந்து
காலை 5 மணிக்கு கோவில் நடைதிறப்பு.
காலை 5 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும்
மதியம் 3 மணி முதல் இரவு 8.00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி.
18 & 19-04-2021 இரண்டு நாட்கள் மூலவர் அபிஷேகம், தீபாரதனைகள்
முடிந்து
காலை 3 மணிக்கு கோவில் நடைதிறப்பு.
காலை 3 மணி முதல் மதியம் 1.00 மணி வரை;
மதியம் 3 மணி முதல் இரவு 8.00 வரை தரிசனம் செய்ய அனுமதி.
20/04/2021 செவ்வாய்க்கிழமை மாலை 4.35 மணிக்கு மேல் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் தங்கத்தேரி்ல் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்குள் பவனி.
இரவு 7மணி அளவில் கொடியிறக்கி இரவு 8மணிக்குள் கடைக்கோவில் வந்தடைதல்.
21-04-2021 புதன்கிழமை மாலை இரு அம்மன்களும் கடைக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலித்தல்.
உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.