அனைவருக்கும் வணக்கம் அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கம்
இன்றைய சேவை (29-03-2020) ஞாயிற்றுக்கிழமை
உணவு கொடுப்போம் உயிர் காப்போம்
"உணவு கிடைத்தவுடன் உலகையே வென்றது போல்
சிறுவனின் புன்னகை
வெளிப்படுத்துகிறது
வறுமையின் வலியை.. "
-- என்பதற்கேற்ப சிவகாசி,
தாலுகா அலுவலகம்,
உயர்திரு. தாசில்தார் ஐயா, உடன் பணிபுரியும் துணை தாசில்தார், PDO , TSO மற்றும் அலுவலக பணியாளர்களின் உதவியால்,
இன்று 100 உணவுகள் மதிய உணவு மற்றும் இரவு உணவாக தாலுகா அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு, சிவகாசி மற்றும் திருத்தங்கல் போன்ற பகுதிகளில் சாலை ஓரங்களில், ஆதரவு இல்லாமல் இருக்கும் உறவுகளுக்கு வழங்கபட்டது.
????????????
இந்த சேவையில், அன்பால் இணைவோம் இளைஞர் நலச்சங்கத்திற்கு அனுமதி மற்றும் இணைத்துகொண்டு செயல்பட்டதற்கு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
இன்றைய சேவையில் அன்பால் இணைவோம் சதீஷ்குமார், அண்ணன் சுரேஷ் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் மாரீஸ்வரன் தோழர் ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
???? நமது சேவைகள் தொடரும் ????